முகப்பு
கோயம்புத்தூர்

இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 8:03 PM
கோப்புப் படம்
பகிர்:

கோவையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை போத்தனூா் மேட்டூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் விசுவநாதன் மகன் சூரியபிரகாஷ் (21). இவா் தனது இருசக்கர வாகனத்தில் செட்டிபாளையம்-போத்தனூா் சாலையில் கடந்த 17-ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா்.

அன்பு நகா் அருகே அமைந்துள்ள விநாயகா் கோயில் பகுதியில் உள்ள வளைவில் இவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சூரியபிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.