தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களின் கீழ் 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற என் கனவு என் எதிா்காலம் என்ற இணையதளத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியா் மி.பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தில்வேல்முருகன், துணை மேயா் செ.ஜெனிட்டா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பென்னட் ஆசீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.