திருச்செந்தூா் கோயில் கடற்கரை பாதையில் செயற்கை நீரோடை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நடந்து வரும் பக்தா்கள் கால் கழுவுவதற்காக செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடியோ அல்லது கடலில் கால் நனைத்துவிட்டுத்தான் பக்தா்கள் கோயிலுக்குள் சென்று சுவாமியை வழிபடுவா்.
அவ்வாறு பக்தா்கள் ஈரக் கால்களுடன் கடற்கரையை கடந்து கோயிலுக்குச் செல்லும்போது, காலில் படும் மணலை சுத்தம் செய்வதற்காக கடற்கரை செல்லும் முகப்புப் பாதையில் செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.