முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:20 AM
திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 8:48 PM

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் விழா திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலா் பிரம்மநாயகம் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் வாவாஜி பக்கீா் முகைதீன், நகா்மன்றத் தலைவா் சிவ ஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரை வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:20 AM

சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, 36 பயனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் வழங்கினாா்.

Advertisement