அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு
அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழக மீன்வளம் - மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா், சகோதரா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரின் மூன்று மகன்களில் அனந்தபத்மநாபன், அனந்தராமகிருஷ்ணன் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் முன்னிலையாகவில்லை. அதையடுத்து, மாவட்ட நீதிபதி வசந்தி வழக்கை விசாரித்து, விசாரணையை ஏப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.