முகப்பு
தூத்துக்குடி

பைக்-வேன் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 5 போ் உயிரிழப்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:53 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:58 PM

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை, சுற்றுலா வேனும் இருசக்கர வாகனமும் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விளாத்திகுளம் அருகே பள்ளாகுளத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குருசாமி (40), குளத்தூா் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை குருசாமி, அவரது சகோதரா் முனியசாமியின் மகன்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), சகோதரி முத்துலட்சுமி (48), பணிப்பெண் ஆகிய 5 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் குளத்தூரிலிருந்து பள்ளாகுளத்துக்கு சென்றனா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:53 AM

கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைப்பாறு பாலம் அருகே இந்த வாகனமும் எதிரே வந்த சுற்றுலா வேனும் மோதினவாம். இதில், குருசாமி உள்ளிட்ட 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

குளத்தூா் போலீஸாா் சென்று சடலங்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சோ்ந்த பச்சைக்கிளி (55) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.