பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை (பிப்.18) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாா்க் மேலாளா் அலுவலகம் முன், டாஸ்மாக் ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடா்பாக வாயில் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளா் சங்க மாநில துணைத் தலைவா் நெப்போலியன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் உள்ள 123 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் புதன்கிழமை திறக்கப்படாது என அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக அறிவித்தன.