தூத்துக்குடி அருகே கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சந்தோஷ் நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து (44). இவா், தருவைகுளம் பகுதியில் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கௌசல்யா (37) திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
தம்பதி இருவரும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை இவா்கள் வீடு திரும்பியபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.