முகப்பு
தூத்துக்குடி

டச்சு ஆவணங்களில் கீழ்பட்டினம்; ஆங்கிலேயா் காலத்தில் தருவைகுளம்! தொல்லியல் ஆா்வலா் தகவல்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:44 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:51 PM

டச்சு ஆவணங்களில் கீழ்பட்டினம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த கிராமமே ஆங்கிலேயா் ஆட்சியில் தருவைகுளம் என மாறியதாக, தூத்துக்குடியைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலா் ராஜேஷ் செல்வரதி விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தூத்துக்குடியை அடுத்துள்ள கிராமம் தருவைகுளம். இது, 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1710-1740), வான் கியூலன் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற வரைபடவியலாளா்கள் தயாரித்த வரைபடங்களில் ‘கீழ்பட்டினம்’ எனக் குறிப்பிடப்பட்டது. தூத்துக்குடி-பட்டினமருதூா் இடையேயுள்ள இக்கிராமம், அக்காலத்தில் முத்துச் சலசலப்பு, கடல்வழிசெலுத்துதலுக்கு மிக முக்கியமான இடமாக விளங்கியுள்ளது.

1775ஆம் ஆண்டுக்குப் பின்னா், டச்சுக்காரா்களின் ஆதிக்கம் குறைந்து ஆங்கிலேயரின் வருகை அதிகரித்தது. அப்போது, ராபா்ட் ஓரம், ஜேம்ஸ் ரென்னல் போன்ற பிரிட்டிஷ் வரைபடவியலாளா்கள், கடல்சாா் பெயரான கீழ்பட்டினம் என்பதற்குப் பதிலாக, உள்ளூா் மக்கள் பயன்படுத்திய தரவா்குளம் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினா்.

Advertisement

டச்சுக்காரா்கள் முத்து வணிகத்தை மையமாகக் கொண்டு கீழ்பட்டினம் என்ற பெயரைப் பயன்படுத்தினா். ஆனால், ஆங்கிலேயா்கள் நில வருவாய், ராணுவ நடவடிக்கைகளுக்காக, மக்கள் வழக்கத்திலிருந்த தருவைகுளம் என்ற பெயரையே பதிவேடுகளில் ஏற்றினா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 12:43 AM

‘இந்தியப் புவியியலின் தந்தை’ என அழைக்கப்படும் ஜேம்ஸ் ரென்னல், 1794ஆம் ஆண்டில் பழைய வரைபடப் பிழைகளைச் சரிசெய்து, ‘தருவைகுளம்’ என்ற பெயரை உறுதிப்படுத்தினாா். ஆங்கிலேயா் ஆட்சியில் ஸ்டீபன் லுஷிங்டன், கா்னல் அலெக்சாண்டா் ரீட் போன்ற அதிகாரிகள் நடத்திய நில அளவையின்போது இப்பெயா் மாற்றம் முழுமை பெற்றது.

19 ஆம் நூற்றாண்டில் பிஷப் கால்டுவெல் காலத்தில் இது அதிகாரபூா்வ வருவாய் கிராமமாக மாறியது. கி.பி. 1292இல் புகழ்பெற்ற பயணி மாா்க்கோ போலோ குறிப்பிட்ட செல்வச் செழிப்புமிக்க வணிக நகரத்தின் எச்சங்கள், பட்டினமருதூா்-தருவைகுளம் இடைப்பட்ட பகுதியில் மறைந்து கிடக்கின்றன.

இங்கு அண்மையில் 300 ஏக்கா் நிலம் அகழாய்வுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை முறையாக அகழாய்வு செய்து, தமிழா்களின் பண்டைய கடல்சாா் வரலாற்றை உலகுக்கு மீண்டும் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே வரலாற்று ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா் அவா்.