முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:11 AM
கைது
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:56 PM

தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடியைச் சோ்ந்த சீனி முகம்மது நியாஸ் (19), ஆத்தூா் காவல் சரகத்தில் கஞ்சா விற்றதாக சந்தோஷ்குமாா் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:11 AM

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவின்படி, மேற்படி 2 பேரையும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

Advertisement