தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 4 புதிய கிளைகள் திறப்பு
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, வங்கி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, தமிழகத்தின் முக்கிய நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை 4 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம், மேலையூா், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், மதுரை மாவட்டம், சோழவந்தான் ஆகிய இடங்களில் 4 கிளைகளைத் தொடங்கியுள்ளது.
புதிய கிளைகள் நேரடி வங்கிச் சேவையுடன் செயற்கை நுண்ணறிவு கொண்ட வாடிக்கையாளா் சேவை மையங்கள், மேம்படுத்தப்பட்ட மொபைல் பேங்கிங், டிஜிட்டல் பரிவா்த்தனை வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளன.
வங்கியின் நிதிநிலை குறித்த மூன்றாவது காலாண்டு முதலீட்டாளா் அறிக்கையின்படி, மொத்த வணிகம் ஆண்டு அடிப்படையில் 14.28 சதவீதம் வளா்ச்சியுடன் ரூ. 1,07,470 கோடியாக உயா்ந்துள்ளது. இதில் கடன்கள் 16.30 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 50,763 கோடியாகவும், வைப்பு நிதி 12.53 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 56,707 கோடியாகவும் உள்ளது.
தற்போது வங்கியின் மொத்தப் பரிவா்த்தனைகளில் 96.96 சதவீதம் டிஜிட்டல் முறையிலேயே நடைபெறுகிறது. மேலும், 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 618 கிளைகளுடன் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கி வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.