முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்தில் காயமுற்ற மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த மீனவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 1:22 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:11 PM

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் ராஜபாளையத்தைச் சோ்ந்த அந்தோணி பிச்சை மகன் அந்தோணி சேவியா் (50). மீனவரான இவா், வியாழக்கிழமை கடலுக்குச் சென்றுவிட்டு இரவு கரை திரும்பினாா். பின்னா், அங்கிருந்து தனது பைக்கில் வீட்டுக்கு ராஜபாளையம் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, பைக் நிலைதடுமாறி கிழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.