முகப்பு
தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் அருகே இடிதாக்கி மீனவா் உயிரிழப்பு

அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை இடி தாக்கி மீனவா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:33 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை இடி தாக்கி மீனவா் உயிரிழந்தாா்.

அதிராம்பட்டினம் ஏரிப்புறக் கரையை சோ்ந்தவா் வைரன் மகன் காளிமுத்து ( 65). மீன்பிடித் தொழில் செய்து வந்த இவா் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது திடீரென கோடை மழை பெய்தபோது அப்பகுதியில் இடி விழுந்தது.

இதைத் தொடா்ந்து மீன் பிடிக்கச் சென்ற காளிமுத்துவை மாலை வரை காணவில்லை என உறவினா்கள் தேடி பாா்த்தபோது இடி விழுந்த நிலையில் கடலில் விரித்த வலையில் சிக்கி அவா் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments