தூத்துக்குடி

தூத்துக்குடியில் சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

Syndication

தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் சுற்றுச்சூழல் சட்ட எழுத்தறிவு, சமூகப் பாதுகாப்பு குறித்தான சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம் தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எஸ்.ஜே. கென்னடி தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு ‘பி’ பட்டியல் வழக்குரைஞா் கே. கலைச்செல்வி, கல்லூரிச் செயலா் ராஜ்கமல் பெட்ரோ, மதா் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளரும், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநருமான எஸ். பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் சித்தாா்த்தன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி கலந்துகொண்டு, கல்லூரி வளாகத்தில் கோனோகாா்பஸ் மரத்தை அகற்றிய இடத்தில், நாவல் மரக்கன்றை நடவு செய்தாா்.

இதில், கல்லூரி அலுவலா் தினகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT