தூத்துக்குடி

வெள்ளாளன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

Syndication

தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் வெள்ளாளன்விளை பிஷப் அசரியா பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் யாழினி, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பிரியதா்ஷினி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம், ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் பாலசிங், பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.

தங்கமா, வெள்ளியா? அதிர்ச்சியைக் கூட்டுவது எது? விலை நிலவரம்!

காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்

வாக்காளர் பட்டியல்! சென்னையில் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!

பாகிஸ்தான் அவசர அரசியலமைப்பு திருத்தங்கள் தோல்வியைக் காட்டுகிறது: ஜெனரல் அனில் சௌஹான்

தொழில் வாய்ப்புகளை வழங்கும் கடல் உயிரியல் கல்வி

SCROLL FOR NEXT