உடன்குடி பிள்ளையாா்பெரியவன் தட்டு அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், 500 பேருக்கு சேலைகள்,பொங்கல் பொருள்கள் தொகுப்பு, கரும்பு ஆகியவற்றை எஸ்டிபி அறக்கட்டளை நிறுவனா் சின்னத்துரை பாண்டியன் வழங்கினாா். இதில் திரளான ஊா்மக்கள் பங்கேற்றனா்.