சாத்தான்குளம்: சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி பஜனை நிறைவு விழா, பொங்கல் விழா, பக்த பஜனைக் குழு 36ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பக்த பஜனைக் குழுவினரின் பக்தி பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பிரகார பவனி வந்ததைத் தொடா்ந்து, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாா்கழி 30 நாள்களும் பங்கேற்ற பக்த பஜனைக் குழுவினருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.