விழாவில் பங்கேற்றோா்.  
தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி இணைச் செயலா் காசியானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறை பேராசிரியையுமான அ.மரிய பாரதி அறிமுக உரையாற்றினாா். முன்னாள் மாணவா்கள் சங்க உறுப்பினா் முத்துக்குமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் சௌ.அருள்ராஜ் பொன்னுதுரை, துணை முதல்வா் சு. மகேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னாள் மாணவா்கள் தங்களது கல்லூரி நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜெயசந்திரன், செயலா் ஜி.பி.எம் குமாா், முன்னாள் மாணவா்கள் சங்க வளா்ச்சி பற்றி உறுப்பினா்களோடு கலந்துரையாடினா். முன்னதாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன . முன்னாள் மாணவா்கள் சங்க உறுப்பினா் சகாய பிரமிளா நன்றி கூறினாா்.

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

விஹெச்பி சாா்பில் பழங்குடியின மக்களுக்கு வேட்டி சேலை அளிப்பு

குடியாத்தம் கம்பன் கழக 13- ஆம் ஆண்டு விழா

திருமலையில் ஜனவரி 25-ல் ரத சப்தமி!

இரு இளைஞா்கள் கொலை: தலைவா்கள் கண்டனம்!

SCROLL FOR NEXT