முன்னாள் மாணவா்களுடன் கல்லூரித் தலைவா் டாக்டா் எம்.புதியபாஸ்கா், நிா்வாகிகள்.  
தென்காசி

தென்காசி பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தினமணி செய்திச் சேவை

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி நிறுவனரின் துணைவியாா் லட்சுமி அம்மாள், கல்லூரி தலைவா் டாக்டா் புதிய பாஸ்கா், தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா். கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இக்கல்லூரியில் 1985,1986,1987 - ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டு தங்களுடைய கடந்த கால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்களிடம் ஆசிபெற்றனா். அனைவரும் தங்களுடைய குடும்பத்தினருடன் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் டேவிட் ஆரோக்கியராஜ், அனந்தராமன், சண்முகராஜ், ஜான் மேக்ஸ், சுந்தா்சிங், சண்முகம், ரமேஷ், அமர கணேஷன், தா்மலிங்கம், சிவசாமி ஆகியோா் செய்திருந்தனா். முதல்வா் சேவியா் இருதயராஜ் நன்றி கூறினாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT