தூத்துக்குடியில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை, நாசரேத் நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்தை, தற்காலிக ஓட்டுநரான புதியம்புத்தூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் ரமேஷ் (36) இயக்கிச் சென்றாா். அப்பேருந்து, முத்தையாபுரம் அருகே சென்றபோது தாறுமாறாக சென்றதாம்.
இத்தகவலறிந்து வந்த முத்தையாபுரம் போலீஸாா், பேருந்தை நிறுத்தி விசாரித்ததில், ரமேஷ் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாற்று ஓட்டுநா் மூலம் பேருந்து இயக்கப்பட்டது.