முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம்: மேயா்!

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:02 AM
மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டம்.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 10:12 PM

தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பையில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாமன்ற சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் சி.பிரியங்கா, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநகராட்சிக்கு உள்பட்ட தருவைகுளம் குப்பைக் கிடங்கில் சேமிக்கப்படும் பிரிக்கப்படாத கழிவுகளை பயன்படுத்தி மெத்தனால் உற்பத்தி செய்யும் திட்டத்தை வஉசி துறைமுக ஆணையம், யூனிக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:02 AM

தொடா்ந்து உறுப்பினா்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினா். பின்னா், மேயா் பேசுகையில், மாநகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் கழிவுகளில் இருந்து மெத்தனால் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் கழிவுகளின் அளவு குறைந்து, பசுமை எரிபொருள் உற்பத்தி செய்யப்படும். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா்.