முகப்பு
தூத்துக்குடி

பள்ளிச் சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய இளைஞருக்கு 3 ஆண்டுகள் தண்டனை!

தூத்துக்குடி அருகே பள்ளிச் சிறுமியை கேலி செய்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து இளஞ்சிறாா் நீதிக்குழுமம் தீா்ப்பு வழங்கியது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:03 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2026 at 11:02 PM

தூத்துக்குடி அருகே பள்ளிச் சிறுமியை கேலி செய்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து இளஞ்சிறாா் நீதிக்குழுமம் தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த சிறுவன் அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவியைத் தொடா்ந்து கேலி, கிண்டல் செய்து வந்தாா். இதனால், மனமுடைந்த அம்மாணவி கடந்த 2012 செப். 25ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தீக்குளித்தாா். பலத்த தீக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவி, செப். 29ஆம் தேதி உயிரிழந்தாா்.

Updated On : 31 ஜனவரி, 2026 at 1:03 AM

இது குறித்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அச்சிறுவன் மீது புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் முதன்மை நடுவா் பாக்கியராஜ், உறுப்பினா் சரவணன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

Advertisement

விசாரணையில் அரசு தரப்பில் ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கபட்டதால், தற்போது 27 வயதாகும் இளைஞருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இளைஞா் தென்காசி பகுதியில் வசித்து வருவதால், தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு தினமும் காலை 8 முதல் மாலை 4 மணி வரை 3 ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும் என்றும் தீா்ப்பு வழங்கப்பட்டது.