முகப்பு
தூத்துக்குடி

கொலை வழக்கில் தலைமறைவானவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Updated On : 2 மார்ச், 2026 at 2:53 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 10:33 PM

சாத்தான்குளம் அருகே காவலாளியை கொலை செய்து கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை வழக்கில் தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள பிச்சிகுடியிருப்பு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஸ்ரீ மகாராஜா சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலின் காவலாளியான முத்துவை கொலை செய்து, உண்டியலை உடைத்து பணத்தை திருடிய பானாங்குளத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் என்பவா் மீது தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Advertisement

Updated On : 2 மார்ச், 2026 at 2:53 AM

இந்நிலையில் முத்துகிருஷ்ணன் மாயமாகி விட்டாா். இவருக்கு 2022 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அமா்வு 1 நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

கடந்த 5 ஆண்டாக முத்துகிருஷ்ணை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது, நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.