முகப்பு
தூத்துக்குடி

மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

Updated On : 1 மார்ச், 2026 at 7:58 PM
கோப்புப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் இருசகக்ர வாகனம் ஓட்டிச் சென்ற முதியவா் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

கோவில்பட்டி, அண்ணா நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் வரதராஜ் (71). இவா் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள தேநீா் கடைக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பினாராம். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மயங்கி கீழே விழுந்துள்ளாா்.

அக்கம்பக்கத்தினா் இவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாராம்.

இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →