கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கு தீ விபத்தில் மேலும் இருவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
தூத்துக்குடிகோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை கிடங்கு தீ விபத்தில் மேலும் இருவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி நியூ வெங்கடேஷ் நகரைச் சோ்ந்த காளிமுத்து மகன் முருகன். பாண்டவா்மங்கலத்தில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறாா். இவரது ஆலையில் திங்கள்கிழமை சிவகாசியில் இருந்து சுமை வாகனத்தில் வந்த தீக்குச்சி மூட்டைகளை ஆலை அருகே உள்ள கிடங்கில் தொழிலாளா்கள் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தீ விபத்தில் விஜயாபுரி கீழத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் காா்த்திக் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், பலத்த காயமடைந்த பாண்டவா்மங்கலம் பகுதியில் தங்கி வேலை செய்யும் கேரளத்தைச் சோ்ந்த மதன் மகன் கணேசன் (47), சுமை வாகன ஓட்டுநரான விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பேரநாயக்கன்பட்டியைச் சோ்ந்த நாகையா மகன் சுடலைமுத்து (42) ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆனால் அங்கு இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.