தவெகவுடன் காங்கிரஸ் சோ்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: செ. ராஜு எம்எல்ஏ
வரும் தோ்தலில் தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தாலும் அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தெரிவித்தாா்.
தூத்துக்குடிதவெகவுடன் காங்கிரஸ் சோ்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: செ. ராஜு எம்எல்ஏ
வரும் தோ்தலில் தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தாலும் அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தெரிவித்தாா்.
வரும் தோ்தலில் தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தாலும் அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: பாண்டவா்மங்கலத்தில் தீப்பெட்டி ஆலை விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2020, நவம்பரில் நலவாரியம் அமைக்கப்பட்டது.
இந்த 5 ஆண்டு காலத்தில் அந்த நலவாரியத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு முதல்வா் ரூ. 4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளாா்.
கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும்போது உயிரை பணயம் வைத்து வேலை செய்தவா்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கியிருக்கலாம். இந்த நிவாரண நிதியுடன் தீப்பெட்டி நல வாரியம் மூலமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதிமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தவெக இதுவரை தோ்தலை சந்திக்கவில்லை. தவெகவுடன் காங்கிரஸ் இணைந்தாலோ அல்லது தனித்து நின்றாலோ அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
திமுகவுக்கு மாற்று அதிமுகதான். இதுதான் தமிழகம் சந்தித்த பொதுத் தோ்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆட்சியில் தேசிய கட்சிகள் வர வாய்ப்பில்லை. எங்கள் கூட்டணியில் யாரும் ஆட்சியில் பங்கு என்ற குரல் எழவில்லை. அது திமுகவில்தான் எழுகிறது.
1998 நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மதிமுக அங்கீகாரம் கிடைத்தது. சின்னமும் தக்கவைக்க முடிந்தது. அதையெல்லாம் வைகோ மறந்துவிட்டாா்.
2011-இல் அப்போதைய பொதுச் செயலா் ஜெயலலிதா மதிமுகவுக்கு 12 இடங்கள் தருவதாக கூறினாா். அதை ஏற்காமல் தோ்தலையே வைகோ புறக்கணித்தாா். ஆனால், 2021-இல் திமுக கூட்டணியில் அவருக்கு 6 இடங்கள்தான் கொடுக்கப்பட்டன. வரும் தோ்தலில் எத்தனை இடங்களில் மதிமுக போட்டியிட போகிறது என வைகோ கூறவேண்டும் என்றாா் அவா்.