முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூரில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

ஆத்தூா் பேரூராட்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 மார்ச், 2026 at 12:54 AM
விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமால்தீன்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 10:28 PM

ஆத்தூா் பேரூராட்சியில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறாா் ஆத்தூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ஏ.கே.கமால்தீன்.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவா் ஏ.கே.கமால்தீன் தலைமை வகித்து இளைஞா்கள், சிறுவா்கள் விளையாடுவதற்காக் 15 வாா்டு உறுப்பினா்களிடமும் கிரிக்கெட், வா­லிபால், கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட தலா 30 வகையிலான 300 விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

Advertisement

நிகழ்ச்சியில் செயல் அலுவலா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். இதில், தலைமை எழுத்தா் சந்திரகுமாா், சுகாதார ஆய்வாளா் காளீஸ்வரன் பணியாளா்கள், ஆறுமுகம், சுரேஷ், பேரூராட்சி கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.