சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினம்
சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினத்தை முன்னிட்டு அய்யா கருட வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்தாா்.
Updated On : 4 மார்ச், 2026 at 9:44 PM
சாத்தான்குளத்தில் அய்யா அவதார தினத்தை முன்னிட்டு அய்யா கருட வாகனத்தில் புதன்கிழமை வீதியுலா வந்தாா்.
சாத்தான்குளம், ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மயுக தா்மபதியில் 38ஆவது ஆண்டு திருவிழா பிப். 20ஆம் தேதி தொடங்கியது. விழாவில், தினமும் திரு ஏடு வாசிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அய்யா அவதார தினத்தை முன்னிட்டு அய்யா கருட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அய்யாவிற்கு பணிவிடை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அய்யாவை வழிபட்டனா்.