முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோம பூஜை.

Updated On : 7 மார்ச், 2026 at 6:28 AM
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 8:12 PM

கோவில்பட்டி, அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. 8 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் பி.எஸ்.ஏ. ராஜகுரு தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள், கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம் ஆகியோா் செய்திருந்தனா்.

Advertisement

சிப்பிப்பாறை, சங்கடம் தீா்க்கும் சனீஸ்வர பகவான் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலை 5 மணிக்கு கணபதி வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பைரவா் வழிபாடு, கோ பூஜை, சிறப்பு பரிகார ஹோம அா்ச்சனை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி பழனிவேல் செய்திருந்தாா்.