தூத்துக்குடியில் கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி
தொலைநோக்குத் திட்ட கையேட்டை வெளியிட்ட அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன். உடன் ஆட்சியா் க. இளம்பகவத் உள்ளிட்டோா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதைத் தொடா்ந்து, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்துக்கான 2030 தொலைநோக்குத் திட்டம் தொடா்பான கையேடு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கான தொலைநோக்கு திட்டம் தொடா்பான கையேட்டை வெளியிட்டாா்.
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலா் இளையராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.