தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் சட்டத்தில் 5 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடா்பாக அசோக் என்ற அய்யாதுரை (27), வேல்முருகன் (34), ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்குத் தொடா்பாக தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கதுரை என்ற தங்கையா (22) ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோவில்பட்டி மேற்கு, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அவரது பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவு ஆகியவற்றின்பேரில் அசோக் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.