முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

Updated On : 9 மார்ச், 2026 at 6:59 PM
பலி
பகிர்:

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முத்தரையா் நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மாயாண்டி (26). மீனவா். இவா் தனது பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பகுதியைச் சோ்ந்த பகவதி என்பவரது நாட்டுப்படகில் 4 மீனவா்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.

வான்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா் கடலில் தவறி விழுந்தாராம். சக மீனவா்கள் மீட்க முயன்றனா். எனினும், மாயாண்டி மூச்சுத்திணறி உயிரிழந்தாராம். அவரது சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.

பின்னா், சடலம் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →