சாத்தான்குளத்தில் திடீா் மழை
சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.
சாத்தான்குளத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில நாள்களாக இரவில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் நிலவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இந்த மழையால் இப்பகுதியில் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனா்.