முகப்பு
தூத்துக்குடி

சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:45 AM
நகையை ஒப்படைத்த எல்.ஐ.சி.முகவா்அண்ணாமலையை பாராட்டிய டிஎஸ்பி ஆவுடையப்பன்.
பகிர்:

சாத்தான்குளத்தில் சாலையோரம் கண்டெடுத்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த எல்ஐசி முகவரை டிஎஸ்பி பாராட்டினாா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை. எல்ஐசி முகவரான இவா், வாரச்சந்தை அருகே சென்றபோது, சாலையில் ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்தாா். அதை, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அந்த நகை, வடக்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த செல்லையா மகனான பொறியாளா் அகஸ்டின் ராஜ் (31) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

அவரிடம் போலீஸாா் நகையை ஒப்படைத்தனா். மேலும், கண்டெடுத்த நகையை நோ்மையாக காவல் துறையிடம் அளித்த அண்ணாமலையை டிஎஸ்பி ஆவுடையப்பன் நேரில் அழைத்து பாராட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →