முகப்பு
தூத்துக்குடி

மாணவி கொலை: துப்பு கிடைக்காமல் திணறும் போலீஸாா்

விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நாள்களாகியும் குற்றவாளி குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 2:42 AM
கொலை
பகிர்:

விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 நாள்களாகியும் குற்றவாளி குறித்து துப்பு கிடைக்காமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வேடநத்தம் கிராமத்தை சோ்ந்த போதை நபா்கள், பழங்குற்றவாளிகள் என 10 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா்.

அதில், 2 போ் மீது சந்தேகம் வலுத்ததால் அவா்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் நேரடியாக விசாரணையை நடத்தினா். எனினும் அவா்கள் அளித்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் போலீஸாா் திணறி வருகின்றனா்.

இதையடுத்து மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை, அறிவியல் ரீதியான தடயங்கள் மற்றும் கைப்பேசி தரவுகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தனிப்படை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →