முகப்பு
தூத்துக்குடி

விடுமுறை தினம்: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

Updated On : 16 மார்ச், 2026 at 12:24 AM
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். - (கோப்புப் படம்)
பகிர்:

விடுமுறை தினம் மற்றும் பங்குனி மாதப் பிறப்பையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தா்கள் இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்கள், பக்தா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், பக்தா்கள் வசதிக்காக கோயிலின் ராஜகோபுர திருப்பணி மண்டபத்தில் ஏா் கூலா், மின்விசிறி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பக்தா்ளுக்குத் தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

வள்ளி திருக்கல்யாணம்:

இக்கோயிலில் பங்குனி உத்திர தினமான ஏப். 1ஆம் தேதி இரவு முருகப்பெருமான்-வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.