முகப்பு
தூத்துக்குடி

8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

Updated On : 23 மார்ச், 2026 at 7:51 PM
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை, குறிஞ்சி நகா் பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி, கால்டுவெல் காலனி பகுதியைச் சோ்ந்த இசக்கி செல்வம் மற்றும் கோரம்பள்ளம், குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்த மேக்சன் சாமுவேல் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள், 2 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து, புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.