பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பிளஸ் 2 மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் புகைப்படம், விவரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள், சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயா் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அது அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதைத் தடுப்பதாகும்.
குளத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறுமியின் புகைப்படம், பெயரை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடா்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள், வலைதளங்களில் பதிவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.