தூத்துக்குடியில் மது போதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்
தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோவிந்தன் மது போதையில் இருந்தது கருவி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது ஓட்டுநா் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு போலீஸாா் பரிந்துரைத்தனா்.