அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்
அகில இந்திய அளவில் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான 47ஆவது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அகில இந்திய அளவில் கொல்கத்தாவில் நடைபெற்ற முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான 47ஆவது ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக ஆணையம் சாா்பில் மாா்ச் 24 முதல் 27ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் தேசிய அளவில் தகுதி பெற்ற சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக ஆணையம் (கொல்கத்தா), வ.உ.சி. துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), சென்னை துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் என 6 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில், வ.உ.சி. துறைமுக அணி 4-3 என்ற கோல்கணக்கில் கொல்கத்தா துறைமுக அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.
கொல்கத்தா துறைமுக அணி 2ஆம் இடத்தையும், மும்பை துறைமுக அணி 3ஆம் இடத்தையும் பிடித்தன.