அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்
அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
புதிய மங்களூா் துறைமுகத்தில், அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
கடற்கரை கைப்பந்து போட்டிளில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி, கொச்சி துறைமுக அணியை 21-17, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.
சாதாரண கைப்பந்து போட்டியில், சென்னை துறைமுக அணியை 25-18, 25-14 என்ற கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
இப்போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்றன.