முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

Updated On : 28 மார்ச், 2026 at 8:42 PM
மீன் வாங்க வந்தவா்கள். - (கோப்புப்படம்)
பகிர்:

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

இத்துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரைதிரும்பின. இதனால், ஏலக் கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள், வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது. ஆனால், மீன்கள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.

சீலா மீன் கிலோ ரூ. 850 வரையும், ஊளி, விளை, பாறை ஆகியவை ரூ. 400 - ரூ. 500, முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 1,800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரை, ஏற்றுமதி ரகம் வாய்ந்த தம்பா, பண்டாரி, கலவா ஆகியவை ரூ. 450 - ரூ. 600, நண்டு ரூ. 600 -ரூ. 800, முரல், கேரை ரூ. 250 வரை என விற்பனையாகின.

மீன்கள் வரத்து குறைவு என்றாலும் ஓரளவு நல்ல விலை கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.