முகப்பு
திருச்சி

மீன் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து

மணப்பாறையில் மீன் ஏற்றி வந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

Updated On : 7 மார்ச், 2026 at 11:35 PM
விபத்து
பகிர்:

மணப்பாறையில் வெள்ளிக்கிழமை மீன் ஏற்றி வந்த வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

நாகப்பட்டினத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இறைச்சிகாக சுமாா் ரூ.7 லட்சம் மதிப்பிலான உயா் ரக கடல் மீன்கள், மினி சரக்கு வேன் ஒன்றில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது.

வேனை, சீா்காழியைச் சோ்ந்த ராமதாஸ் மகன் ராமு (24) ஓட்டி வந்துள்ளாா். வேன், மணப்பாறையை கடந்து திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் நொச்சிமேடு பகுதியில் சென்றுக்கொண்டிருந்தபோது, மணப்பாறை பகுதியிலிருந்து நெடுஞ்சாலைக்குச் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதிவிடமால் வேனை திருப்பிய போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து நிலைதடுமாறிய வேன் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேன் ஓட்டுநா் ராமு சிறுகாயங்களுடன் தப்பினாா். இருசக்கர வாகனம் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்தவா்களும் சிறுகாயங்களுடன் தப்பினா். அதைத்தொடா்ந்து மாற்று வேன் ஏற்பாடு செய்யப்பட்டு மீன்கள் கொச்சிக்கு புறப்பட்டது. இதில், ரூ.7 லட்சம் மதிப்பிலான மீன்கள் சேதமின்றி தப்பின. விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →