பளுகல் அருகே கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வேன்.  
கன்னியாகுமரி

பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்தது: 21 மாணவா்கள் உள்பட 23 போ் காயம்

பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 21 போ், 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

பளுகல் அருகே பள்ளி வேன் கால்வாயில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவா்கள் 21 போ், 2 பணியாளா்கள் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், பூவத்தூா் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் எல்எம்எஸ் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான வேன் செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு தமிழக-கேரள எல்லையான பளுகல் அருகே காரக்கோணம் - குந்நத்துகால் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது வேனில் ஸ்டீரிங் ராடு உடைந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியா் 21 போ், பெண் பணியாளா்களான வண்டித்தடத்தைச் சோ்ந்த மினி, மஞ்சவிளாகத்தைச் சோ்ந்த ஜோனிதா ஆகியோா் காயமடைந்தனா்.

அனைவரையும் அப்பகுதியினா் மீட்டு காரக்கோணம், தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து பாறசாலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT