முகப்பு
தூத்துக்குடி

கயத்தாறில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 3 மே, 2026 at 5:29 AM
பகிர்:

கயத்தாறு அருகே உள்ள அய்யனாா் ஊத்து டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளராக வேலை செய்து வரும் இசக்கிமுத்து மீது கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்தும், அவா் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு, டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க இணைச் செயலா் கல்யாணக்குமாா் தலைமை வகித்தாா். டாஸ்மாக் பணியாளா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன் முன்னிலை வகித்தாா்.

கயத்தாறு வட்டாரத்திற்குள்பட்ட டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement