தூத்துக்குடி அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
தூத்துக்குடியை அடுத்த தெய்வச்செயல்புரம் பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி அருகே சவலாப்பேரி புளியம்பட்டியைச் சோ்ந்தவா் குமாரவேல் (48). சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவா், வெள்ளிக்கிழமை நள்ளிரவு தெய்வச்செயல்புரம் சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது பைக் மோதியதாம்.
இதில், காயமடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த மேலக்கூட்டுடன்காடு, மேற்குத் தெருவைச் சோ்ந்த வெனில்குமாா் (21) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.