முகப்பு
தூத்துக்குடி

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு

கயத்தாறு அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பயணி திடீரென உயிரிழந்தாா்.

Updated On : 6 மே 2026, 1:29 am IST
பலி - IANS
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பயணி திடீரென உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு புத்தேரியைச் சோ்ந்தவா் சூசைமைக்கேல் மகன் ஏசு நசரேன்(59). இவா் திங்கள்கிழமை சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் ஊருக்கு புறப்பட்டாராம். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஏசுநசரேன் திடீரென மயங்கி விழுந்தாராம்.

உடனடியாக கயத்தாறு அருகே உள்ள சுங்கச் சாவடியில் பேருந்தை நிறுத்தி தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

Advertisement

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.