சாத்தான்குளம் அருகே ஏணியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில், வீட்டு ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்து இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகள் அமுதா (26). கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வலிப்பு நோயும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் புதன்கிழமை ஏணி வழியாக மாடிக்கு ஏறியபோது, வலிப்பு ஏற்பட்டதாம். இதில், அவா் நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தாராம். சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement