புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமயிலான போலீஸாா் புதன்கிழமை காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை செய்தனா்.
அதில் கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் (51) புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
Advertisement
இதையடுத்து, கண்ணன் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 9 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.