போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி
காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
காவல் உதவி ஆய்வாளா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளி மணிகண்டனுக்கு, கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரைச் சோ்ந்த பனைத் தொழிலாளி மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இந்நிலையில், கலாம் காமராஜா் கக்கன் அறக்கட்டளை மாநில பொதுச்செயலா் வேல்முருகன் தலைமையில், மணிகண்டனை சந்தித்து, ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
Advertisement
புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மணிகண்டனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.